“ஒரே நேரத்தில் 8 படத்தில் நடித்த அனுபவம்” – துல்கர் சல்மான்

செவ்வாய், 3 அக்டோபர் 2017 (12:51 IST)
ஒரே நேரத்தில் எட்டு படங்களில் நடித்த அனுபவம் கிடைத்தது எனத் தெரிவித்துள்ளார் துல்கர் சல்மான்.



 
பிஜோய் நம்பியார் இயக்கத்தில் துல்கர் சல்மான் நடித்துள்ள படம் ‘சோலோ’. தமிழ் மற்றும் மலையாளத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தில், நான்கு வேடங்களில் நடித்துள்ளார் துல்கர். அவருக்கு ஜோடியாக சாய் தன்ஷிகா, ஸ்ருதி ஹரிஹரன், ஆர்த்தி வெங்கடேஷ் மற்றும் நேகா ஷர்மா ஆகியோர் நடித்துள்ளனர். மொத்தம் 11 பேர் இந்தப் படத்துக்கு இசை அமைத்துள்ளனர்.

“நான்குமே வெவ்வேறு மாதிரியான வேடங்கள். எல்லாவற்றுக்கும் தனித்தனி ஸ்டைலைப் பின்பற்ற வேண்டும். சின்ன விஷயம் கூட ஒரே மாதிரி வந்துவிடக்கூடாது. நடக்கும் ஸ்டைல் உள்பட மாற்றி நடித்தேன். ஒரே நேரத்தில் தமிழ் மற்றும் மலையாளத்தில் எடுத்ததால், எட்டு படங்களில் நடித்த அனுபவம் கிடைத்தது”  என்கிறார் துல்கர் சல்மான்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்