நடிகர்கள் அதிகம் சம்பளம் கேட்கிறார்களா ? பிரகாஷ்ராஜ் பதில்

வியாழன், 30 ஜூலை 2020 (21:00 IST)
நடிகர்கள் அதிகம் சம்பளம் வாங்குவதில்லை என பிரபல நடிகர் பிரகாஷ் ராஜ் தெரிவித்துள்ளார்.

கொரொனா காலத்தில் ஹைதராபாத்தில் உள்ள தனது பண்ணைவீட்டில் ஓய்வு எடுத்து வரும் பிரகாஷ் ராஜ், ஒரு பேட்டியளித்துள்ளார். அதில். தான் மரம் செடி – கொடிகளுடன் பேசி வருவதாகவும், சினிமாவில் நடிகர் நடிகைகளுக்கு  அவர் நடித்த படங்கள் அடிப்படையில் வியாபாரத்தை கணக்கில் வைத்தே சம்பளம் கொடுக்கிறார்கள் படம் வியாபாரம் ஆகவில்லை என்றால் சம்ளம் அதிகம் கொடுப்பதில்லை என்று தெரிவித்துள்ளார்.

மேலும் ஹீரோக்கள் யாரும் இவ்வளவு சம்பளம் வேண்டுமென நிர்பந்திப்பதில்லை. ரசிகர்களும் புதிய கதாநாயகர்களையும் வரவேற்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்