நா முத்துகுமார் குடும்பத்துக்கு உதவ இசைக் கச்சேரி… இயக்குனர்கள் எடுக்கும் முன்னெடுப்பு!

vinoth

வெள்ளி, 23 மே 2025 (15:15 IST)
பிரபல பாடலாசிரியர் நா முத்துக்குமார் மிகப்பெரிய அளவில் தமிழ் திரையுலகில் புகழ் பெற்ற நிலையில் திடீரென கடந்த 2016 ஆம் ஆண்டு உடல்நல கோளாறு காரணமாக மரணமடைந்தார் அவரது மரணம் இளம் இயக்குனர்கள் மற்றும் இசை அமைப்பாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்தது.

இயக்குனர்கள் லிங்குசாமி, ராம், ஏ எல் விஜய் மற்றும் செல்வராகவன் உள்ளிட்ட  பல முன்னணி இயக்குனர்கள் அவரைத் தொடர்ந்து தங்கள் படங்களில் நா முத்துக்குமாரை பயன்படுத்தினர். அவர்கள் படங்களுக்கு முத்துகுமார் எழுதிய பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட்டாகின.

இந்நிலையில் அவர் மறைவுக்குப் பின்னர் இப்போது அவரது குடும்பத்துக்கு நிதியுதவி செய்யும் விதமாக ‘ஆனந்த யாழை’ என்ற இசைக் கச்சேரியை ஜூன் மாதம் நடத்தவுள்ளனர். அதன் மூலம் வரும் வருவாயில் முத்துகுமார் குடும்பத்துக்கு ஒரு வீட்டை வாங்கி தரவுள்ளதாக சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்