ஹிட் கொடுத்தும் அடுத்த படத்தை ஆரம்பிக்காமல் இருக்கும் இயக்குனர் விருமாண்டி… காரணம் சசிகுமாரா?

செவ்வாய், 21 பிப்ரவரி 2023 (14:45 IST)
க பெ ரணசிங்கம் படத்தின் இயக்குனர் விருமாண்டி இயக்கும் புதிய படத்தில் இயக்குனரும் நடிகருமான சசிகுமார் நடிக்க ஒப்பந்தம் ஆனார்.

கொரோனா பொதுமுடக்க நாட்களில் நேரடியாக ஓடிடியில் வெளியான க பெ ரணசிங்கம் திரைப்படம் வெற்றியைப் பெற்றது. இந்த படத்தில் வெளிநாட்டில் விபத்து ஒன்றில் இறந்து போன தனது கணவனின் உடலை போராடி இந்தியா கொண்டுவரும் மனைவியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்திருந்தார். இதில் ஆங்காங்கே அரசியல் கருத்துகளை தெளித்திருந்தார் இயக்குனர் விருமாண்டி.

இந்த படத்தின் வெற்றியை அடுத்து தனது அடுத்த படத்துக்கான கதையை எழுதி வந்தார் இயக்குனர் விருமாண்டி. அந்த கதையில் நடிக்க சசிகுமார் ஒப்பந்தம் ஆனார். ஆனாலும் அந்த படம் தொடங்கப்படவே இல்லை. இதற்குக் காரணம் சசிகுமாருக்கு தற்போது மார்க்கெட் இல்லை என்பதால் தயாரிப்பு நிறுவனம் தயங்குவதாக சொல்லப்படுகிறது. இதனால் இந்த படம் ட்ராப் செய்யப்பட்டு விட்டதாக தற்போது தகவல்கள் பரவி வருகின்றன.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்