இன்று முதல் இயக்குனர் வெங்கட் பிரபு படத்தின் ஷூட்டிங்… வெளியான அறிவிப்பு

புதன், 21 செப்டம்பர் 2022 (08:50 IST)
இயக்குனர் வெங்கட் பிரபு மாநாடு திரைப்படத்துக்குப் பிறகு நாக சைதன்யாவை வைத்து ஒரு தெலுங்கு படத்தை இயக்க உள்ளார்.

நாக சைதன்யா நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகும் புதிய படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்க உள்ளார். இந்த படத்தை சீனிவாசா சில்வர் ஸ்கிரீன் நிறுவனம் தயாரிக்கிறது. சில மாதங்களுக்கு முன்னர் தயாரிப்பாளர் மற்றும் நாக சைதன்யா ஆகியோரோடு வெங்கட்பிரபு இருக்கும் புகைப்படம் வெளியாகி கவனம் பெற்றது.

இந்த படத்தில் வில்லனாக அருண் விஜய் நடிக்க உள்ளார் என்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. இந்நிலையில் படத்தின் படப்பிடிப்பு வரும் ஜூன் 23 ஆம் தேதி முதல் தொடங்க உள்ளதாக சொல்லப்பட்டது. ஆனால் இன்னும் படப்பிடிப்பு தொடங்கப்படவில்லை. இந்நிலையில் இந்த படத்தில் இருந்து அருண் விஜய் தற்போது விலகி விட்டதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் ஜூன் மாதமே தொடங்க இருந்த இந்த படத்தின் படப்பிடிப்பு தாமதமான நிலையில் இன்று முதல் ஷூட்டிங் தொடங்குகிறது. இதைப் படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்