மருதமலை படத்தில் நடிக்க மறுத்த அஜித்… காரணம் வடிவேலுவா?

புதன், 17 மே 2023 (08:03 IST)
இயக்குனர் சுந்தர் சி யின் உதவியாளரும் மூவேந்தர், குங்குமப்பொட்டு கவுண்டர், தலைநகரம், படிக்காதவன், மருதமலை உள்ளிட்ட ஏகப்பட்ட வெற்றி படங்களை இயக்கியவர் சுராஜ். அவர் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான நாய்சேகர் ரிட்டர்ன்ஸ் திரைப்படம் பெரியளவில் கவனம் பெறவில்லை.

இந்நிலையில் சமீபத்தில் அவர் அளித்த நேர்காணலில் தான் இயக்கிய மருதமலை படத்தின் கதையை முதலில் விஜய் மற்றும் அஜித் ஆகியோருக்கு கூறிய சந்தர்ப்பங்கள் பற்றி பேசியுள்ளார். அதில் அஜித்துக்கு இந்த கதையை சொன்னதாகவும், அவருக்கு கதை பிடித்திருந்ததாகவும் கூறியுள்ளார்.

ஆனால் முன்னணி நகைச்சுவை நடிகர் ஒருவர் இருந்ததால் அவரோடு சேர்ந்து நடிக்க தயங்கினார் எனக் கூறியுள்ளார். அந்த முன்னணி நகைச்சுவை நடிகர் வடிவேலுதான் என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை. ராஜா படத்துக்கு பிறகு வடிவேலு மற்றும் அஜித் ஆகிய இருவரும் இணைந்து படங்களில் நடித்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்