என்ன ஆனார் சிபி சக்ரவர்த்தி?... அடுத்த படம் என்ன ஆனது?

திங்கள், 22 மே 2023 (08:23 IST)
டான் திரைப்படத்தின் வெற்றியை அடுத்து கவனிக்கப்படும் இயக்குனராகியுள்ள சிபி சக்ரவர்த்தி. சிவகார்த்திகேயனின் எஸ்கே ப்ரொடக்‌ஷன்ஸும் லைகா நிறுவனமும் இணைந்து ஒரு தயாரித்த டான் திரைப்படம் கடந்த ஆண்டு மே 13 ஆம் தேதி ரிலீஸ் ஆகி மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்துள்ளது. 100 கோடி ரூபாயை திரையரங்குகள் மூலமாக மட்டும் உலகம் முழுவதும் வசூல் செய்ததாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் சிபி சக்ரவர்த்தியின் அடுத்த படத்தில் ரஜினி நடிக்க விருப்பப்பட்டு, அதற்காக கதைக் கேட்டு வேலைகள் நடந்து வந்த நிலையில் , திடீரென அந்த கதையில் திருப்தி இல்லாத ரஜினி அந்த கதையை வேண்டாம் என சொல்லிவிட்டதாக சொல்லப்படுகிறது. இதையடுத்து சிபி சக்ரவர்த்தி அடுத்த என்ன படம் இயக்கப் போகிறார் என்பது இதுவரை அறிவிக்கப்படவில்லை.

இந்நிலையில் இப்போது சிபி, தானே ஒரு சின்ன பட்ஜெட் படத்தைத் தயாரித்து அதில் புதுமுகங்களை இயக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படம் பற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்