மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் படத்தின் நாயகி அறிவிப்பு.. தயாரிப்பாளர் இவரா?

Siva

செவ்வாய், 12 மார்ச் 2024 (15:11 IST)
இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு இம்மாதம் தொடங்க இருக்கும் நிலையில் இந்த படத்தின் நாயகி மற்றும் தயாரிப்பாளர் குறித்த விவரங்கள் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
பரியேறும் பெருமாள், கர்ணன் மற்றும் மாமன்னன் ஆகிய மூன்று திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் மாரி செல்வராஜ் தற்போது விக்ரம் நடிக்க இருக்கும் படத்தை இயக்க உள்ளார். 
 
இந்த படத்தின் படப்பிடிப்பு இம்மாத இறுதியில் தொடங்க இருக்கும் நிலையில் இந்த படத்தின் நாயகனாக துருவ் விக்ரம் நடிக்க இருப்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. இந்த படத்தின் நாயகியாக அனுபமா பரமேஸ்வரன் நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் ஏற்கனவே தனுஷ் நடித்த கொடி, ஜெயம் ரவி நடித்த சைரன் உள்ளிட்ட படங்களிலும் பல மலையாள படங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
மேலும் இந்த படத்தை பா ரஞ்சித் மற்றும் நிறுவனம் அப்ளாஸ் எண்டர்டெயின்மெண்ட் இணைந்து தயாரிக்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டது. இது குறித்த புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்