சரியான இயக்குனரின் கையில் சிக்கிய துருவ் விக்ரம்… மூன்றாவது பட அப்டேட்!

புதன், 16 செப்டம்பர் 2020 (18:07 IST)
துருவ் விக்ரம் இப்பொது கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் படத்தில் நடிக்க உள்ள நிலையில் அடுத்த படத்தில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ளார்.

பரியேறும் பெருமாள் வெற்றிப்படத்தை இயக்கிய மாரி செல்வராஜ் அடுத்ததாக இயக்கி வரும் திரைப்படம் கர்ணன். இந்த படத்தில் தனுஷ் கதாநாயகனாக நடிக்க கலைப்புணி தாணு தயாரிக்கிறார். தேயிலை தோட்ட தொழிலாளர்கள் பிரச்சனைகள் குறித்த கதையம்சம் கொண்ட இந்த படத்தின் படப்பிடிப்பு நெல்லையில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் கொரொனா ஊரடங்குக்குப் பின்னர் மீண்டும் தொடங்க உள்ளது.

இந்நிலையில் மாரி செல்வராஜ் அடுத்ததாக இயக்கும் புதிய படத்தில் விக்ரம்மின் மகன் துருவ் விக்ரம் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. துருவ் விக்ரம் இப்போது தனது தந்தை விக்ரம்முடன் இணைந்து கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் படத்தில் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. வரிசையாக திறமையான இயக்குனர்கள் படத்தில் அவர் நடிக்க இருப்பது அவரின் சினிமா வாழ்க்கையை ஏறுமுகமாக அமைக்கும் வாய்ப்பினை ஏற்படுத்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்