கர்ணன் ரிலீஸ் ஆகி இரண்டாம் ஆண்டில் மாரிசெல்வராஜோடு இணையும் படத்தை அறிவித்த தனுஷ்!

திங்கள், 10 ஏப்ரல் 2023 (09:20 IST)
தனுஷ் தனது சொந்தத் தயாரிப்பு நிறுவனமான வுண்டர்பார் நிறுவனத்தின் மூலம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் படங்களைத் தயாரித்து வந்தார். மிகக்குறைந்த காலத்திலேயே இந்நிறுவனத்தின் மூலம் சுமார் 20 படங்களைத் தயாரித்திருந்தார். இதில் ரஜினியின் காலா படமும் அடக்கம். அவர் கடைசியாக தயாரித்த காலா திரைப்படம் மிகப்பெரிய அளவில் அவருக்கு பொருளாதார ரீதியாக நஷ்டமாக அமைந்ததாக சொல்லப்படுகிறது.

சிலப் படங்கள் பெரியளவில் நஷ்டத்தை அளித்ததும் மற்றும் அந்நிறுவனத்தில் தனுஷின் நம்பிக்கைக்குப் பாத்திரமாக விளங்கிய சில நிர்வாகிகள் கணக்கு வழக்குகளில் கையாடல் செய்துள்ளதாலும் தனுஷ் பயங்கர அப்செட்டில் இருந்ததாக சொல்லப்பட்டது. இதனால் கடந்த சில வருடங்களாக வுண்டர்பார் நிறுவனம் இயங்கவே இல்லை. இந்நிலையில் இப்போது மீண்டும் வுண்டர்பார் பிலிம்ஸுக்கு தனுஷ் உயிர் கொடுக்க உள்ளார்.

இந்நிலையில் வுண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனத்தின் 15 ஆவது படமாக உருவாக உள்ள படத்தை இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்க உள்ளார். நேற்று கர்ணன் படம் ரிலீஸாகி 2 ஆம் ஆண்டில் இந்த அறிவிப்பை தனுஷ் வெளியிட்டுள்ளார்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்