மீண்டும் இயக்குனர் ஆகும் தனுஷ்… பிரபல நடிகரோடு கூட்டணி!

சனி, 12 நவம்பர் 2022 (15:53 IST)
நடிகர் தனுஷ் இயக்குனராக தன்னை நிரூபித்த திரைப்படம் பவர் பாண்டி. அந்த படத்தில் ராஜ்கிரண் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.

நடிகரான தனுஷ், ‘பவர் பாண்டி’ மூலம் இயக்குநராகவும் தன்னை நிரூபித்துக் காட்டினார். அறிமுகமான முதல் படத்திலேயே சிறந்த இயக்குநர் என்றும் பெயரெடுத்தார்.  இதை அடுத்து இயக்கும் படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்கப் போவதாக அறிவித்தது.

‘பாகுபலி’ போன்ற சரித்திரக்கதையைத்தான் அவர் படமாக்கப் போவதாக சொன்னார்கள். தெலுங்கு நடிகரான நாகார்ஜுனாவோடு, தனுஷும் முக்கிய வேடத்தில் நடிப்பதாக கூறப்பட்டது. ஆனால் சில நாட்கள் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில் அந்த படம் கைவிடப்பட்டது.

இந்நிலையில் இப்போது சில வருட இடைவெளிகளுக்குப் பின்னர் தனுஷ் மீண்டும் இயக்குனராக ஆக உள்ளாராம். இந்த படத்திலும் அவரே நடித்து இயக்க உள்ளார் என்று சொல்லபடுகிறது. மேலும் அவரோடு விஷ்ணு விஷாலும் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளாராம்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்