கோச்சடையான் படத்தைத் தொடர்ந்து, நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்ற படத்தை சௌந்தர்யா இயக்குகிறார். இந்தப் படத்தில் நாயகனாக தனுஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். நாயகிகளாக காஜல் அகர்வால், மஞ்சிமா மோகன் ஆகியோர் ஒப்பந்தமாகியுள்ளனர்.
படத்தில் மேலுமொரு நாயகி இருப்பதாகவும், விரைவில் அந்த கதாபாத்திரத்தில் முன்னணி நடிகை ஒப்பந்தம் செய்யப்படுவார் எனவும் படக்ககுழு கூறியுள்ளது. தனுஷ் இயக்கிவரும் பவர் பாண்டி படம் முடிந்ததும் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படப்பிடிப்பு தொடங்க உள்ளது.