தலைவி பட ஹீரோயினுக்கு கொலை மிரட்டல்!

திங்கள், 20 செப்டம்பர் 2021 (23:26 IST)
இந்திய சினிமாவில் முன்னணி நடிகை கங்கனா ரணாவத். இவர் தமிழ், இந்தி உள்ளிட்ட மொழி சினிமாவில் நடித்து வருகிறார்.

கடந்தாண்டு சுசாந்த் சிங் மரணத்தைத் தொடர்ந்து தொலைக்காட்சி விவாதங்களில்   கலந்துகொண்ட கங்கனா ரணாவத், இந்தி பட பாடலாசிரியர் ஜாவித் அக்தரை விமர்சித்தார். எனவே ஜாவின் அக்தர் மீது அவதூறு ஏற்படுத்தும் வகையில் பேசியதாக அவர் மீது மும்பை நீதிமன்றத்தில் வழங்கு உள்ளது.

இந்நிலையில் இதற்கான எதிர் மனுவின் கங்கனா மற்றும் அவரது சகோதரியை ஜாவித் அக்தர் வீட்டிற்கு அழைத்து மிரட்டல் விடுத்தார் என கங்கனா நீதிபதியிடம் கூறினார். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்