கபாலி படத்திற்கு துணை நிற்கும் நீதிமன்றம்

செவ்வாய், 19 ஜூலை 2016 (14:52 IST)
கபாலி படத்திற்கு தடை விதிக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.
 


 


கபாலி படத்தின் டிக்கெட் கூடுதல் விலைக்கு விற்கப்படுவதால் கபாலி படத்தைத் தடை செய்ய வேண்டும் என, சென்னையைச் சேர்ந்த தேவராஜன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த மனு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. மனுவை விசாரித்த நீதிபதி கிருபாகரன் கபாலி படத்திற்கு தடை விதிக்க முடியாது என்று தீர்ப்பு வழங்கினார். தீர்ப்பிற்கு முன்பு, ரசிகர்கள் கூடுதல் விலை கொடுத்து டிக்கெட் வாங்கினால் எப்படி தடை விதிக்க முடியும்? என நீதிபதி கேள்வி எழுப்பி உள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்