கொரோனா ஊரடங்கு உத்தரவு: திருநங்கைகளுக்கு உதவிய ராகவா லாரன்ஸ்!

புதன், 1 ஏப்ரல் 2020 (13:23 IST)
ராகவா லாரன்ஸ் திருநங்கைகளின் வீட்டிற்கு தேவையான மளிகை பொருட்கள் கொடுத்து உதவியிருக்கிறார்.

சீனாவில் ஆரம்பித்த கொரோனா வைரஸ் நோய் தொற்று உலக நாடுகளில் பரவி பெருவாரியான மக்கள் இனத்தை அழித்து வருகிறது. இதனால் அந்தந்த நாட்டு மக்கள் அனைவரும் இந்த நோய் தொற்றிலிருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள விழிப்புணர்வுடன் இருந்து வருகின்றனர்.


மேலும் சிலர் கொரோனா குறித்த விழிப்புணர்வு செய்து வருவதுடன் வறுமையில் கஷ்டப்படும் மக்களுக்கு நிதியுதவி அளித்து வருகின்றனர். அந்தவகையில் தற்போது நடிகர் ராகவா லாரன்ஸ் சென்னையில் உள்ள அனைத்து திருநங்கைகளுக்கு மாதம் முழுக்க வீட்டிற்கு தேவையான பொருட்களை வழங்கி பெரும் உதவி செய்து அவர்களின் பசியை போக்கியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்