ஒரு படம் திரையரங்கில் வெளியாகும் வடிவத்தில்தான் சென்சார் செய்யப்பட வேண்டும். அதாவது முழுமையாக முடிந்த பிறகு. ஆனால் கோச்சடையான் மார்ச் 19 சென்சார் உறுப்பினர்களுக்கு திரையிட்டபோது முழுமையாக முடிவடையவில்லை என்பதே சர்ச்சை கிளம்ப காரணம். படத்தின் சவுண்ட் மிக்சிங் பணிகள் உள்பட பல வேலைகள் முடிவடையாத போதே சென்சார் சான்றிதழ் வாங்கிவிட்டதாக கூறப்பட்டது.
கோச்சடையான் படம் சம்பந்தப்பட்டவர்கள் அளிக்க வேண்டிய விளக்கத்தை சென்சார் அளிக்க வேண்டிய அவசியமென்ன? இப்படிப்பட்ட குற்றச்சாட்டுக்கு ஒரு படம் ஆளான பிறகு சென்சார் அவர்களிடம் முறைப்படி விளக்கம் கேட்க வேண்டும். படம் திரைக்கு வந்த பிறகு அதனை பார்த்தே சென்சார் விதிகள் மீறப்பட்டுள்ளனவா என்பது பற்றி முடிவு செய்ய வேண்டும். அதற்குள் படம் சம்பந்தப்பட்டவர்கள் அளிக்கும் விளக்கத்தை வைத்தே சென்சார் இப்படியொரு முடிவுக்கு வருவது சரியா? இந்த கரிசனம் மற்றப் படங்களுக்கும் காட்டப்படுமா? பக்கிரிசாமி அதையும் விளக்கியிருக்கலாம்.