இறந்ததாகக் கூறி பணம் வசூல்.... பிரபல நடிகர் போலீஸில் புகார்

புதன், 2 ஜூன் 2021 (23:09 IST)
தமிழ் சினிமாவில் நிறைய படங்களில்  குருக்களாக நடித்துப் புகழ்பெற்றவர் நடிகர் மங்களநாத குருக்கள்.

இவர் இறந்துவிட்டதாகவும் அவரது சடலத்தை தகனம் செய்வதற்கு பணமில்லை உதவுங்கள் எனக் கூறி சில விஷமிகள் வதந்திகள் பரப்பி, மக்களிடம் பணத்தை வசூல் செய்து வருகின்றனர்.

இதையறிந்த மங்களநாத குருக்கள்  தான் இறந்துவிட்டதாக அவதூறு பரப்பி தவறான வகையில் பணம் வசூலித்துவருகின்றனர். எனவே சம்பந்தபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என மங்கள நாதகுருக்கள் போலீசில் புகாரளித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்