கோப்ரா படத்தின் கேரளா ரிலீஸ் உரிமையைக் கைப்பற்றிய பிரபல நிறுவனம்!

புதன், 6 ஜூலை 2022 (14:58 IST)
விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் கோப்ரா திரைப்படம் ஆகஸ்ட் 11 ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது.

இதுவரை விக்ரம் நடித்த படங்களிலேயே அதிக பட்ஜெட் படமாக கோப்ரா உருவாகியுள்ளது. கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளாக படப்பிடிப்பு நடந்துவந்த இந்த படத்தின் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன்னர் முடிவுற்றது. இதையடுத்து படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படம் இணையத்தில் வெளியானது. ஆகஸ்ட் மாதம் 11 ஆம் தேதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தின் தமிழக உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளது. அதுபோல படத்தின் ஒட்டுமொத்த வெளிநாட்டு உரிமையையும் ‘யுனைடெட் இந்தியா எக்ஸ்போர்ட்டர்ஸ்’ நிறுவனம் கைப்பற்றியுள்ளது. முன்னதாக தொலைக்காட்சி உரிமையைக் கலைஞர் தொலைக்காட்சி நிறுவனம் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

இதையடுத்து இப்போது கேரள ரிலீஸ் உரிமையை இபார் மீடியா - ராபி மாதிரா மற்றும் ட்ரீம் பிக் பிலிம்ஸ் நிறுவனங்கள் கைப்பற்றி உள்ளனர். இதுபற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.
 

 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்