சினிமா பண்டி ரீமேக் உரிமையைக் கைப்பற்றிய தயாரிப்பாளர்… இயக்குனர் குழப்பம்?

புதன், 23 ஜூன் 2021 (15:37 IST)
தெலுங்கில் உருவாகி மிகப்பெரிய அளவில் கவனம்பெற்ற சினிமா பண்டி திரைப்படம் தமிழில் ரீமேக் ஆக உள்ளதாம்.

நெட்பிளிக்ஸில் கடந்த மாதம் வெளியானது சினிமா பண்டி எனப்படும் தெலுங்கு சினிமா. ஒரு கிராமத்தில் ஆட்டோ ஓட்டுனராக இருக்கும் ஒருவரிடம் அதி உயர் தொழில்நுட்பக் கேமரா கிடைக்க, தன் நண்பர்கள், மனைவி மற்றும் ஊர்க்காரர்களை வைத்து ஒரு சினிமாவை எடுக்க ஆரம்பிக்கிறார். சினிமாவின் அரிச்சுவடியே தெரியாத அவர் சினிமாவை எடுத்து முடித்தாரா, கேமராவை தொலைத்தவரின் நிலை என்ன ஆனது என்பதை மிகவும் எளிமையாக உருவாக்கி இருந்தார்கள். இந்த படம் பலரையும் கவர்ந்திருந்தாலும் எதிர்மறை விமர்சனங்களும் வந்துகொண்டுதான் இருக்கிறது.

இந்த படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை டகால்டி படத்தின் தயாரிப்பாளர் கைப்பற்றியுள்ளார். இந்நிலையில் அதை இயக்க ராதாமோகனிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இந்நிலையில் இப்போது மேலும் சில இயக்குனர்களிடம் படத்தை இயக்குவது குறித்து தயாரிப்பாளர் ஆலோசிப்பதாக சொல்லப்படுகிறது.

 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்