கலையில் மத, இன, மொழி பாகுபாடெல்லாம் கூடாது என்பது எப்போதும் ஏட்டுச்சுரைக்காய்தான். கலையுலகில் நடக்கும் உள்ளடி வேலைகள் வெளியுலகைவிட மோசம்.
மலையாளிகளான சித்ரா, யேசுதாஸ் போன்றவர்கள்தான் தமிழ் சினிமாவில் கோலோச்சினார்கள். பாலசுப்பிரமணியம்கூட ஆந்திராவைச் சேர்ந்தவர்தான். சித்ராவுக்குதான் மற்ற பாடகர்களைவிட அதிக வாய்ப்புகள் தமிழில் தரப்பட்டன. அவரைப் போல் மொழி வேறுபாடு பார்த்திருந்தால் சித்ராவால் இப்படியொரு உன்னத நிலையை அடைந்திருக்க முடியுமா?
தமிழில் தொடர்ச்சியாக வாய்ப்புகள் பெற்ற போது, மலையாளியான எனக்கு வாய்ப்பு தராமல், தமிழ் நாட்டைச் சேர்ந்த பாடகிகளுக்கு வாய்ப்பு தாருங்கள் என சித்ராவால் சொல்ல முடிந்ததா? எனில் இப்போது மட்டும் ஏன் இந்த அங்கலாய்ப்பு? இவ்வளவுக்கும் ஸ்ரேயா கோஷலை மலையாளத்தைவிட தமிழில்தான் அதிகம் பாட அழைக்கிறார்கள்.