தொகுப்பாளினிக்கு பாலியல் தொல்லைக் கொடுத்தாரா வைரமுத்து? சின்மயி வெளியிட்ட ஆதாரம்!

புதன், 14 அக்டோபர் 2020 (16:24 IST)
பாடலாசிரியர் வைரமுத்து மீது தொடர்ச்சியான பாலியல் தொல்லை குற்றச்சாட்டுகளை சுமத்தி தமிழ் சினிமா உலகை அதிர்ச்சியடைய வைத்தா பாடகி சின்மயி.

வைரமுத்து இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் பாடகி சின்மயி பாலியல் அத்துமீறல் புகார் அளித்தார். இதைத் தொடர்ந்து ஒரு இயக்கமாக மீடூ உருவாக பல பெண்களின் குற்றச்சாட்டுகளை சின்மயி வெளிக்கொண்டு வந்தார். சின்மயிக்கு ஆதரவாக பலர் கருத்து தெரிவித்தாலும் அவர் வெறும் பப்ளிசிட்டிக்காக வைரமுத்து மீது பழி போடுகிறார் எனவும் பலர் குற்றஞ்சாட்டி வந்தனர். ஆனால் வைரமுத்து இந்த புகார்கள் குறித்து பெரிதாக எதுவும் அலட்டிக் கொள்ளவில்லை.

இந்நிலையில் இப்போது மீண்டும் ஒரு சர்ச்சையைக் கிளப்பியுள்ளார் சின்மயி. அவர் பகிர்ந்துள்ள ஒரு புகைப்படத்தில் ‘தொலைக்காட்சி தொகுப்பாளினி ஒருவர் வைரமுத்து தனக்கு பாலியல் தொல்லை தந்ததாகவும், தான் எத்தனை முறை தொலைபேசி எண்ணை மாற்றினாலும் மீண்டும் மீண்டும் கண்டுபிடித்து தன்னை அழைத்து தொல்லைகள் கொடுத்ததாகவும் சின்மயிக்கு மெஸேஜ் செய்துள்ளார்’ இதை பகிர்ந்துள்ள சின்மயி அந்த பெண் குடும்ப சூழல் காரணமாக மீ டூ கிளம்பி இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இதைப் பகிர்ந்துள்ளார் எனக் குறிப்பிட்டுள்ளார்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்