திருமணம் ஆன சிறுமி தாலியை தனது உடைக்குள் மறைத்து வைத்தபடியே பள்ளிக்கு வந்ததாகவும், ஆனால் ஆசிரியர்கள் அதை கண்டுபிடித்து விசாரணை மேற்கொண்டபோது, தனது பெற்றோர்கள் தனக்கு திருமணம் செய்து வைத்ததாக கூறியுள்ளதாகவும் தெரிகிறது.
இந்த நிலையில், 14 வயது சிறுமியை திருமணம் செய்த 25 வயது நபர் மீதும் சிறுமியின் பெற்றோர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.