தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட மொழி படங்களில் நடித்து வருபவர் கேத்ரின் தெரஸா. பல படங்களில் ஒரு பாடலுக்கும் குத்தாட்டம் போட்டு வந்தார் கேத்ரின்.
தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்ட் வர கடம்பன் படத்தை பெரிதும் எதிர்பார்த்தார். ஆனால், அந்த படம் அவருக்கு தோல்வியை தான் தந்தது. எனவே, தனது கவனத்தை தெலுங்கு சினிமாவின் பக்கம் திருப்பியுள்ளார்.
தெலுங்கு சினிமாவில் கேத்ரினுக்கு மவுஸு அதிகம் என்றாலும், இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் கேத்ரினை செக்கெண்ட் ஹோரோயினாகவும், ஒரு பாடலுக்கு நடனமாவும் மட்டுமே அழைக்கின்றனர்.
போயபட்டி ஸ்ரீனுவின் இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடமாடவுள்ளார். இதற்கு இரு முக்கிய காரணங்கள் உள்ளதாம். ஒன்று ஸ்ரீனு, சரைநோடு படத்தில் கேத்ரினுக்கு நல்ல கதாபாத்திரம் கொடுத்தாராம். இன்னொன்று இந்த ஒரு பாடலுக்கு நடனமாட கேத்ரினுக்கு ரூ.60 லட்சம் சம்பளம் பேசப்பட்டுள்ளதாம்.