விக்ரம் & மாஸ்டர் படங்களின் பாடல் ஆசிரியர் விஷ்ணு எடாவன் பெண் பரபரப்பு புகார்!

திங்கள், 13 பிப்ரவரி 2023 (09:26 IST)
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான விக்ரம் மற்றும் மாஸ்டர் ஆகிய படங்களில் பாடல்களை எழுதியவர் அந்த படங்களின் இணை இய்ககுனர் விஷ்ணு எடாவன். இந்த படங்களில் அவர் எழுதிய பாடல்கள் பெரும் வெற்றி பெற்ற நிலையில் தொடர்ந்து அவருக்கு பாடல்கள் எழுதும் வாய்ப்புகள் வர ஆரம்பித்துள்ளன. சமீபத்தில் ரிலீஸான டாடா படத்தில் கூட அவர் பாடல்கள் எழுதியுள்ளார்.

இந்நிலையில் விஷ்ணு எடாவன் மீது ஒரு பெண் பரபரப்பு குற்றச்சாட்டை அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விஷ்ணு எடாவன் தன்னைக் காதலித்ததாகவும், அதன் மூலம் தான் கர்ப்பம் ஆனதாகவும், இப்போது திருமணம் செய்துகொள்ள அவர் மறுப்பதாகவும் சென்னை திருமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்