இயக்குநர் மணிரத்னம் மீது வழக்குப்பதிவு

வெள்ளி, 3 செப்டம்பர் 2021 (16:06 IST)
இந்திய சினிமாவில் முன்னணி இயக்குநர் மணிரத்னம். இவர் நாற்பதாண்டுகளாகப் படங்கள் இயக்கி வருகிறார்.

இந்நிலையில், தற்போது இவர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலைப் படமாக்கி வருகிறார்.

பெரும் பொருட்செலவில் பிரமாண்டமாக உருவாகிவரும் இப்படத்தில் ஜெயம்ரவி, கார்த்தி, விக்ரம், ஐஸ்வர்யாராய், உள்ளிட்ட ஏராளமனான நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர்.

இந்நிலையில், இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது. இதில் போர் காட்சிகள் படமாக்கப்பட்டு வருவதால் குதிரை உள்ளிட்ட விலங்குகள் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இதில், கடந்த மாதம் ஒரு குதிரை விபத்தில் பலியானதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து இந்திய விலங்குகள் நல வாரியம் விசாரணை நடத்தும்படி கடிதம் எழுதப்பட்டுள்ளது.

இதுகுறித்து , இயக்குநர் மணிரத்னம், குதிரை உரிமையாளர்கள் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

மேலும், குதிரை பலியானது குறித்த வீடியோ அல்லது புகைப்படங்கள் அனுப்பவர்களுக்கு ரூ.25 ஆயிரம் வெகுமதி தரப்படும் என பீட்டா( விலங்குகள் பாதுகாப்பு அமைப்பு) அறிவித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்