பாப் மார்லியின் பேரன் ஜோ மெர்சி மார்லி மரணம்! ரசிகர்கள் சோகம்

வியாழன், 29 டிசம்பர் 2022 (14:58 IST)
பிரபல பாப் பாடகரும் பாப் மார்லியின் பேரனுமான ஜோ மெர்சா மார்லி இன்று மரணமடைந்துள்ளதாக தகவல் வெளியாகிறது.

கரீபியன் கடலில் அமைந்திருக்கும் ஒரு சிறிய நாடு ஜமைக்கா. இந்த நாடு இசைக்காவே மிகவும் புகழ்பெற்று விளங்குகிறது.

உலகம் முழுவதும் அதிக ரசிகர்களை கொண்டிருக்கும்  பார்ப் மார்லி இங்கு 1945 ஆம் ஆண்டு பிறந்தவர் தான்.ஆனால் 36 வயதிலேயே மரணடைந்தார்.  இன்று வரை இவரது பாடல்கள் எல்லா நாடுகளிலும் பிரபலம்.

இவருக்கு அடுத்து, இவரது பேரனும் ஜமைக்கன் பாப் பாடகருமான  ஜோ மெர்சா தன் பாடல்கள் மூலம் ரசிகர்களை மகிழ்வித்து வந்தார்.

31 வயதனா இவர் மரணமடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உலக  இசை ரசிகர்களிடையே  சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்