பிக்பாஸ் டைட்டில் வென்ற கையேடு புதிய படத்தில் கமிட்டான ஆரி!

செவ்வாய், 19 ஜனவரி 2021 (11:21 IST)
உலக தமிழர்களை தன்வசபடுத்தி தனக்கென தனி ரசிகர்களை உருவாக்கி மக்கள் மனதில் இடம் பெற்ற  பிக்பாஸ் வின்னர் ஆரி அர்ஜுனனின் புதிய படத்தை இயக்குகின்றார் அறிமுக இயக்குனர் அபின். இந்த படத்தில் முதல் முறையாக போலீஸ் வேடத்தில் நடிக்கிறார் ஆரி. 
 
ஷவுரியா புரொடக்ஷன்ஸ் -சுப்பையா மற்றும் அபின் ஃபிலிம் பேக்டரி இணைந்து தயாரிக்கும்  இப்படத்தை அறிமுக இயக்குனர் அபின்இயக்குகிறார்.  ஆரிக்கு ஜோடியாக இப்படத்தில் நடிகை வித்யா பிரதிப் கதாநாயகியாக நடிக்கிறார். இன்வெஸ்ட்டிகேசன்  க்ரைம், கமர்சியல் த்ரில்லராக உருவாகி வரும் இப்படம் சினிமா ரசிகர்களுக்கு விருந்தளிக்க விரைவில் வருகின்றது. 
 
கடந்த 10 வருடங்களாக வெளிநாடுகளில் படதொகுப்பாளராகவும்,  இந்தியாவில் செலிபிரிட்டி போட்டோகிராபராக வலம் வந்துகொண்டிருந்த அபின் தனது அடுத்தகட்ட பயணமாக கதை, திரைக்கதை, வசனம், எழுதி இப்படத்தின் மூலம் அறிமுக இயக்குனராகவுள்ளார். இப்படத்தில் முனிஷ்காந்த் உட்பட பலரும்  முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர்.
 
முதல் முறையாக  ஒரு காப் ஸ்டோரி script பன்றதுல ஆரி அர்ஜுனன் தன்னுடைய சந்தோஷத்தை தெரிவித்திருக்கிறார். இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி அடுத்தடுத்த கட்டங்களாக 
மதுரை, திண்டுக்கல், பழனி  உள்ளிட்ட நகரங்களில்  படப்பிடிப்பு  நடைபெற உள்ளது., 
 
அறிமுக இயக்குனர் அபின் மீது எல்லையில்லா அன்பும் கதையின் கருவில் உள்ள சுவாரசியத்திற்காகவும் பிரபல  இயக்குனர் ஏஆர் முருகதாஸ் மற்றும் நடிகர் இயக்குநர், திரைக்கதை எழுத்தாளர் என பன்முகங்களைக் கொண்டு தமிழில் பல வெள்ளி விழா சூப்பர் ஹிட் படங்களை இயக்கிய ஆர்.சுந்தரராஜன் ஆகிய  இருவரும் கலந்து கொண்டு படக்குழுவை வாழ்த்தினர். 
 
இசைப்புயல் ஏஆர் ரஹ்மானிடம் உதவியாளராக பணியாற்றிய ஸ்டெர்லின் நித்தியா இப்படத்திற்கு இசை அமைக்கிறார். மெர்சல் படத்தில் ஆளப்போறான் தமிழன் என்ற  பாடல் வரிகள் மூலம் உலக தமிழ் மக்களை திரும்பி பார்க்க வைத்த புகழ்பெற்ற பாடலாசிரியர் விவேக் பாடல்களை எழுதுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்