கண்கள் நிலம் நோக்கி உன் வருகைக்காக என் காத்திருப்பு - காதலில் உருகும் அபிராமி!

வியாழன், 26 செப்டம்பர் 2019 (11:32 IST)
பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்ற போட்டியாளர்களுள் ஒருவரான அபிராமி காதல் கவிதைத்துவத்துடன் புகைப்படத்தை வெளியிட்டு அனைவரையும் யோசிக்க வைத்துள்ளார். 


 
அஜித் நடிப்பில் வெளிவந்த நேர்கொண்ட பார்வை படத்தின் மூலம் ரசிகர்களுக்கு பரீட்சியமான அபிராமிக்கு பிக்பாஸில் நுழைய வாய்ப்பு கிடைத்தது. பின்னர் சில நாட்கள் இருந்த அவர் மக்களின் ஓட்டுக்கள் குறைந்து நிகழ்ச்சியை விட்டு வெளியேற்றப்பட்டார். ஆனால் அதற்கிடையில் சக போட்டியாளரான முகனுடன் காதல் வயப்பட்டார். 
 
ஆனால், அவரோ நான் ஒரு நல்ல நண்பனாக மட்டும் உண்னுடன் பயணிக்க முடியும். காதல் எல்லாம் இல்லை என்று கூறிவிட்டார்.  பின்னர் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறினார் அபிராமி. அதையடுத்து முகனை பார்ப்பதற்காக ப்ரீஸ் டாஸ்க் மூலம் முகனின் தாயார் சென்னை வந்தார். அப்போது முகனை பிக்பாஸ் வீட்டில் சென்று சந்திப்பதற்கு முன் அபிராமியை சந்தித்தார். அந்த புகைப்படங்ககள் இணையத்தில் வெளியாகி அபிராமியின் காதலுக்கு முகனின் தயார் கிரீன் சிக்னல் காட்டிவிட்டார் என பரவலாக பேசப்பட்டது. 
 
இந்நிலையில் அடிக்கடி போட்டோஷூட் நடத்திவரும் அபிராமி தற்போது பிங்க் நிற ட்ரடீஷ்னல் உடையில் பொஸ் கொடுத்துள்ளார். அந்த புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டுள்ள அவர் " கண்கள் நிலம் நோக்கி உன் வருகைக்காக என் காத்திருப்பு" என்று கூறி பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை கண்ட நெட்டிசன்ஸ் இன்னும் கொஞ்சம் நாள் பொறுத்திரும்மா வந்து சேர்ந்திடுவான் என கூறி வருகின்றனர்.
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

Kangal nilam nokki un varugaikaaga en kaathiruppu... ( just a verse not literally meaning anything so haters calm down) wardrobe- @ekantastudio photography- @mahazphotography

A post shared by

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்