குரூப்பிஸம் பண்ணி சாவடிக்காதீங்க... நெத்தியில் அடித்தாற்போல் கூறிய ஆரி!

வெள்ளி, 30 அக்டோபர் 2020 (09:54 IST)
நேற்றைய பிக்பாஸ் எபிசோடில் வீட்டில் உள்ள போட்டியாளர்கள் இந்த நிகழ்ச்சிக்கு வந்ததால் யாரை மிஸ் பண்றீங்க..? எதுக்காக அவங்கள மிஸ் பண்றீங்க என்பதன் ஒரு காரணத்தை கூற வேண்டும் என டாஸ்க் கொடுத்திருந்தார்.

தற்போது அந்த டாஸ்கில் அனிதா மற்றும் ஆரி இருவரும் ஓர்ஸ்ட் performance'ல் செலக்ட் செய்துள்ளனர். இதுகுறித்து பேசிய ஆரி இந்த வீட்டில் குரூப்பிஷம் பண்றீங்க... அது யார் யாருன்னு நான் முகத்துக்கு நேராகவே நெத்தியில் அடித்தாற்போல் சொல்றேன் என கூறி கோபமாக பேசியுள்ளார். அதற்கு உடனே அந்த 4 பேரு கொண்ட குரூப்பிஷன் ஆரியுடன் சண்டைக்கு வருகின்றனர்.

ஆரி சொல்வது 100% உண்மை. அவர் மிகவும் நேர்மையாக ஆரம்பத்தில் இருந்தே ஒரே மாதிரி நடந்துக்கொள்வதை ஆடியன்ஸ் பாராட்டி வருகின்றனர். இந்த சீசனில் எந்த பிரச்சனை ஒழிந்தாலும் குரூப்பிஸம் பிரச்சனை மட்டும் கடைசி வரை ஒழியாது போல.. எது எப்படியோ... ஆரி பார்முக்கு வந்துட்டாரு.. இருக்கு இன்னக்கி சம்பவம் இருக்கு.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்