படப்பிடிப்பு தொடங்கும் முன்பே பஞ்சாயத்துக்கு போன ஜெயம் ரவியின் போகன்

செவ்வாய், 1 மார்ச் 2016 (10:28 IST)
ரோமியோ ஜுலியட் படத்தை இயக்கிய லக்ஷ்மண், மீண்டும் ஜெயம் ரவி, ஹன்சிகாவை வைத்து இயக்கும் படம் போகன். இந்தப் படத்தை பிரபுதேவா இயக்குகிறார். இன்னொரு ஹீரோவாக அரவிந்த்சாமி நடிக்க உள்ளார்.


 
 
இதன் படப்பிடிப்பு தொடங்கும் முன்பே, படத்தின் கதை என்னோடது என்று உதவி இயக்குனர் ஒருவர் கட்டையை போட்டிருக்கிறார். பஞ்சாயத்தில், இது உறுதியாக, பத்து லட்சம் தருவதாக கூறியுள்ளார் லக்ஷ்மண். உதவி இயக்குனர் அதனை மறுத்து அதிக பணம் கேட்க, இந்த கதையே வேண்டாம் என்று, வேறு கதையை உருவாக்க உட்கார்ந்துவிட்டார்களாம்.
 
ஏற்கனவே உள்ள கதையை கொஞ்சம் வெட்டி ஒட்டி எடுக்கப் போகிறார்கள். பாவம் அந்த உதவி இயக்குனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்