தஞ்சாவூரில் தொடங்கியது அதர்வா பட படப்பிடிப்பு!

வியாழன், 5 ஆகஸ்ட் 2021 (10:30 IST)
நடிகர் அதர்வா நடிப்பில் சற்குணம் இயக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு தஞ்சாவூரில் தொடங்கியுள்ளது.

நடிகர் அதர்வா தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட 10 ஆண்டுகளாக நடித்து வந்தாலும் வெற்றிப் படங்கள் எண்ணிக்கை மிகக்குறைவுதான். அதில் குறிப்பிட்டு சொல்லும் படி அவர் நடித்த படம் என்றால் பரதேசி மற்றும் சண்டிவீரன் போன்ற படங்கள்தான். சண்டிவீரன் படத்தை பாலா தயாரிக்க இயக்குனர் சற்குணம் இயக்கி இருந்தார். இந்நிலையில் மீண்டும் இவர்கள் இருவரும் கூட்டணி அமைக்க உள்ளனராம். சண்டிவீரன் படமே மிக பெரிய அளவில் எதிர்பார்ப்பு இருந்தாலும் பெரிய வெற்றிப் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இப்போது இருவரும் மீண்டும் இணைந்துள்ள படத்தின் படப்பிடிப்பு இப்போது தஞ்சாவூரில் தொடங்கி நடந்துவருகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்