மணிரத்னத்தால் என் கனவு நிறைவேறியது… கார்த்திக் நரேன் புகழாரம்!

ஞாயிறு, 7 மார்ச் 2021 (16:18 IST)
நவரசா ஆந்தாலஜி வெளியீடு குறித்து அதன் இயக்குனர்களில் ஒருவரான கார்த்திக் நரேன் டிவீட் செய்துள்ளார்.

இயக்குனர் மணிரத்னம் மற்றும் ஜெயந்திரா ஆகியோர் இணைந்து நெட்பிளிக்ஸுக்காக ஆந்தாலஜி திரைப்படத்தை தயாரித்து வருகின்றனர். நவரசா எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த தொடரில் 9 கதைகள் காதல், சிரிப்பு, பரிவு, கோபம், வீரம், பயம், அருவருப்பு, அதிசயம் மற்றும் சாந்தம் என 9 நவரசங்களையும் வைத்து 9 கதைகளை 9 இயக்குநர்கள் இயக்கவுள்ளனர். இந்த தொடருக்கு கிரியேட்டிவ் ஹெட்டாக மணிரத்னம் உள்ளார். இந்த 9 படங்களையும் கெளதம் மேனன், பிஜோய் நம்பியார், அரவிந்த் சாமி, கார்த்திக் நரேன், கார்த்திக் சுப்பராஜ், கே வி ஆனந்த், சர்ஜுன், பொன்ராம் ஆகியோர் ஒப்பந்தமானார்கள்.

இதில் அரவிந்த்சுவாமி நடித்துள்ள அறிவியல் புனைகதையை கார்த்திக் நரேன் இயக்கியுள்ளார். சில தினங்களுக்கு முன்னர் நவரசா ப்ரோமோ ஒன்றை வெளியிட்டது நெட்பிளிக்ஸ். அதை பகிர்ந்த கார்த்திக் நரேன் ‘நவரசா, ஒரே நேரத்தில் பதற்றமும், ஆர்வமும் கொடுத்தது. நீண்ட காலமாக இந்த திரைக்கதையைப் படமாக்க வேண்டும் என நினைத்திருந்தேன். மணிரத்னம் இல்லையென்றால் இந்த படம் கண்டிப்பாக திரைக்கு வந்திருக்காது.உங்களை எப்போது வந்து சேரும் என்று ஆவலோடு காத்திருக்கிறேன்.’ எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்