‘அருவி’ படத்தைப் பாராட்டிய இயக்குநர் ஷங்கர்

திங்கள், 18 டிசம்பர் 2017 (10:53 IST)
கடந்த வாரம் வெளியான ‘அருவி’ படத்தை, இயக்குநர் ஷங்கர் பாராட்டியுள்ளார்.
அருண் பிரபு புருஷோத்தமன் இயக்கத்தில் கடந்த வாரம் ரிலீஸான படம் ‘அருவி’. ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு, எஸ்.ஆர்.பிரபு இருவரும் தயாரித்துள்ளனர். அதிதி பாலன், முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்  பல உலகத் திரைப்பட விழாக்களில் இந்தப் படம் திரையிடப்பட்டுள்ளது.
 
இந்தப் படத்தைப் பார்த்த எல்லோருமே பாராட்டி வருகின்றனர். அனைத்து தரப்பைச் சேர்ந்த ரசிகர்களையும் ஒரு படம் ஈர்த்திருப்பது ஆச்சரியமான விஷயம். படத்தைப் பற்றி மவுத் டாக் இருந்ததால், கடந்த மூன்று நாட்களாக எல்லா தியேட்டர்களிலும் ஹவுஸ் புல்லாக ஓடியது.
 
இந்தப் படத்தைப் பார்த்த இயக்குநர் ஷங்கரும் பாராட்டியுள்ளார். “மிகச்சிறந்த படம் ‘அருவி’. எல்லோருடைய  முகமூடியையும், எல்லா விஷயத்தைப் பற்றிய முகமூடியையும் இந்தப் படம் தோலுரித்துக் காட்டியிருக்கிறது. அருண் பிரபு  புருஷோத்தமன், அதிதி பாலன் மற்றும் படக்குழுவினருக்கு வாழ்த்துகள்” என ட்விட்டரில் தெரிவித்துள்ளார் ஷங்கர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்