“யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம்” - சிவகார்த்திகேயன்

சனி, 13 ஜனவரி 2018 (14:40 IST)
‘யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம்’ என நடிகர் சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
பல வருடங்களாக அரசியலுக்கு எதிர்பார்க்கப்பட்ட ரஜினியும், அரசியலுக்கு வரப்போவதாக அறிவித்து விட்டார். அவருக்கு முன்பே யாருமே எதிர்பார்க்காத கமலும் அரசியலுக்கு வந்துவிட்டார். எனவே, பிரபலங்கள் யாரைப் பார்த்தாலும், அவர்கள் இருவரும் அரசியலுக்கு வந்ததைப் பற்றி கருத்து கேட்டு வருகின்றனர்  மீடியாக்காரர்கள்.
 
அப்படி, ரஜினி - கமல் இருவரும் அரசியலுக்கு வந்தது குறித்து சிவகார்த்திகேயனிடம் கேட்கப்பட்டது. “இந்தக் கேள்விக்குப் பதில் அளிக்கும் அளவுக்கு எனக்கு வயசோ, அனுபவமோ இல்லை. ஆனாலும், யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம் என நினைக்கிறேன்” எனப் பதில் அளித்துள்ளார் சிவகார்த்திகேயன்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்