பிரபாஸுக்கு ஓகே சொன்ன அனுஷ்கா: அதிகாரப்பூர்வ தகவல்!!

வியாழன், 6 ஜூலை 2017 (11:43 IST)
பாகுபலி படத்தின் மூலம் அனைவருக்கும் பிடித்த ஜோடியாக மாறினர் பிரபாஸ் மற்றும் அனுஷ்கா. இருவரையும் இணைத்து காதல் கிசுகிசுகள் பல வெளிவந்தன.


 
 
இந்நிலையில் பிரபாஸ் அடுத்து நடிக்கயுள்ள சாஹோ படத்திற்கு நாயகியை தேடி வந்தனர். பாலிவுட் நடிகைகள் படத்தில் நடிக்க மறுத்ததால் பிரபாஸ் அனுஷ்காவை சிபாரிசு செய்தார்.
 
படக்குழுவினரும் அனுஷ்காவுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால், அனுஷ்கா இதற்கு பதில் தெரிவிக்காமல் இருந்த நிலையில் தற்போது படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார் என்ற செய்தி வெளியாகியுள்ளது.
 
பிரபாஸ் அனுஷ்கா இருவரும் சேர்ந்து நடிக்கும் ஐந்தாவது படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்