சூர்யா படத்தில் சிங்கிள் பாடலை பாடிய அனிருத்!

திங்கள், 6 டிசம்பர் 2021 (15:18 IST)
சூர்யா நடிக்கும் அடுத்த படத்தில் அனிருத் ஒரு பாடலை பாடி உள்ளதாக தற்போது தகவல் கசிந்துள்ளது. 
 
சூர்யா நடிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் எதற்கும் துணிந்தவன். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில வாரங்களுக்கு முன்னர் முடிவடைந்தது என்பதும் இந்த படத்தின் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் இந்த படத்தில் ஏற்கனவே இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் ஒரு பாடலை பாடி உள்ள நிலையில் தற்போது அனிருத் ஒரு பாடலை பாடி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது 
 
இந்த பாடல் மாஸ் பாடல் என்றும் எதற்கும் துணிந்தவன் படத்தில் இந்த பாடல் ஹைலைட்டாக இருக்கும் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இந்த படத்திற்கு இமான் இசையமைத்துள்ளார் என்பதும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது என்பது குறிபிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்