மூளையில் சர்ஜரி: உடல் நலிவடைந்து வீல் சேரில் வந்த அர்ச்சனா!

வியாழன், 22 ஜூலை 2021 (13:54 IST)
பிரபல தொகுப்பாளினி அர்ச்சனாவுக்கு அண்மையில் மூளையில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக அறுவை சிகிச்சை நடந்தது. அதை தனது சமூகவலைத்தளங்களின் மூலமாக ரசிகர்களுக்கு அறிவித்தார். கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அர்ச்சனாவுக்கு மூளையில் ஏற்பட்ட ஓட்டை  அடைக்க அவரது காலில் இருந்து Tissue எடுத்து மூளையில் அடைக்கப்பட்டுள்ளதாம். 
 
அதன் பின்னர் சில நாட்கள் மருத்துவமனையிலேயே சிகிச்சை பெற்று நேற்று தான் வீடு திரும்பினார். அவர் உடல் மிகவும் சோர்ந்து நலிவடைந்த நிலையில் வீல் சேரில் அமர்ந்து வீடு திரும்பிய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. மேலும், தன் சிகிச்சைக்கு பெரும் பங்காற்றிய மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொண்டார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்