ரஜினியின் உடல் பூரண நலமுடைய வேண்டி அபூர்வ ராகங்கள் முதல் வேட்டையன் வரை உள்ள ரஜினியின் 171 உருவங்களை மரப்பலகை மற்றும் களிமண்னால் வடிவமைத்து கொலு அமைத்த தீவிர ரஜினி ரசிகர்!

J.Durai

சனி, 5 அக்டோபர் 2024 (13:24 IST)
மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் உள்ள திருமண தகவல் மையம் நடத்திவரும் ரஜினியின் தீவிர ரசிகரான கார்த்திக் (49) கடந்த சில ஆண்டுகளாக ரஜினியின் உருவத்தில் கருங்கல்லினாலான உருவச் சிலை அமைத்து,அவரது இல்லத்தில் அதற்கான தனி அறை அமைத்து , ரஜினி கோவில் என்ற பெயரில்,
நாள்தோறும் ரஜினிக்கு பால், தயிர், தேன் ,இளநீர் உள்ளிட்ட 9 வகையான அபிஷேகங்கள் நடத்தி சிறப்பு பூஜை நடத்தி பூஜித்து வருகிறார்.
 
தற்போது நவராத்திரி விழாவையொட்டி ரஜினியின் அபூர்வராகங்கள் முதல் வேட்டையன் வரை உள்ள ரஜினியின் உருவங்களை மரப்பலகையினாலும் களிமண் - னாலும் கொலு பொம்மைகளாக வடிவமைத்து,  பொதுமக்களின் பார்வைக்காக வைத்துள்ளார்.
 
மேலும் ரஜினியின் உடல் பூரண குணமடைய வேண்டியும் பிரார்த்தனை செய்து வருவதாகவும் ரஜினியின் தீவிர ரசிகர் கார்த்திக் தெரிவித்துள்ளார்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்