12 வருடங்களாக சலிக்காமல் எழுதி வரும் அமிதாப் பச்சன்! ரசிகர்களுக்கு நன்றி !

வெள்ளி, 17 ஏப்ரல் 2020 (15:26 IST)
இந்தி சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடிகரான அமிதாப் பச்சன் தனது வலைதளத்தை தொடங்கி 12 வருடங்களாக அதில் எழுதி வருகிறார்.

இந்தி சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடிகர்களில் ஒருவரான அமிதாப் பச்சன் கடந்த 2008 ஆம் ஆண்டு ஏப்ரல் 17ஆம் தேதி தனது வலைதளத்தை தொடங்கினார். அதையடுத்து தினமும் ஒரு நாள் கூட தவறாமல் தனது வலைதளத்தில் எழுதி வந்துள்ளார்.

இந்நிலையில் 12 ஆண்டுகள் நிறைவு அடைவதை ஒட்டி அமிதாப் பச்சன் ‘இதுவரை 4424 நாள்கள் ஆகிவிட்டன. ஒருநாள் கூட வலைத்தளத்தில் எழுதாமல் இருந்ததில்லை. உங்களால்தான் இது முடிந்தது. ரசிகர்களுக்கு நன்றி’ எனத் தெரிவித்து புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்