வெளிநாடுகளில் முதலிடத்தைப் பிடித்த பேபி

புதன், 28 ஜனவரி 2015 (12:38 IST)
நீரஜ் பாண்டேயின் 3-வது படம் பேபி, அக்ஷய் குமார் நடித்த இந்தப் படம் தீவிரவாதத்தைப் பற்றியது. படம் இந்தியாவில் நான்கு தினங்களில் 50.97 கோடிகளை வசூலித்துள்ளது.
வெளிநாடுகளிலும் படம் பரவலான வரவேற்பை பெற்றுள்ளது. 
 
யுஎஸ்ஸில் முதல்வார இறுதியில் 85 திரையிடல்களில் 2.15 கோடிகளை வசூலித்துள்ளது.
 
கன்டாவில் முதல்வார இறுதியில் 14 திரையிடல்களில் 51.67 லட்சங்களை தனதாக்கியுள்ளது.
 
யுனைடெட் அரபு எமிரேட்ஸில் இப்படம் முதல்வார இறுதியில் 2.98 கோடிகளை வசூலித்துள்ளது.
 
யுகே மற்றும் அயர்லாந்தில் 38 திரையிடல்களில் 62.71 லட்சங்களை வசூலித்துள்ளது.
 
ஆஸ்ட்ரேலியாவில் முதல்வார இறுதி வசூல் 18 திரையிடல்களில் 50.53 லட்சங்கள்.
 
நியூசிலாந்தில் எட்டு திரையிடல்களில் 11.96 லட்சங்களை தனதாக்கியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்