கிரிக்கெட் வீரரைப் பற்றி படம் இயக்கும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்… அதர்வாவுக்கு மாற்றாக தேடப்படும் ஹீரோக்கள்!

வெள்ளி, 4 நவம்பர் 2022 (14:33 IST)
இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இந்தியில் ஒரு படத்தை இயக்க ஒப்பந்தமானார். அது சம்மந்தமான போஸ்டரும் வெளியானது. இந்நிலையில் இப்போது ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தான் பாலிவுட் படம் ஒன்றை இயக்கபோவதாக அறிவித்துள்ளார். அந்த படத்துக்கு ஓ சாத்தி லால் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த படம் இப்போது சில காரணங்களால் தொடங்கப்படவில்லை.

இந்நிலையில் ஐஸ்வர்யா இயக்கும் புதிய படத்தில் ரஜினிகாந்த் ஒரு கௌரவ வேடத்தில் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இதுபற்றி தற்போது வெளியாகியுள்ள தகவலின் படி இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. முதலில் ஐஸ்வர்யா இயக்கத்தில் இந்த படத்தில் நடிக்க ரஜினி தயங்கியவதாகவும், ஆனால் ஐஸ்வர்யா அவரை சமாதானப்படுத்தி ஒத்துக்கொள்ள வைத்ததாகவும் சொல்லப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்தில் நடிகர் அதர்வா முரளி கதாநாயகனாக நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த படம் கிரிக்கெட் வீரர் ஒருவரைப் பற்றிய படமாக உருவாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதனால் கிரிக்கெட் விளையாடத் தெரிந்த வேறு சில நடிகர்களையும் படத்தில் நடிக்க வைக்க முயற்சிகள் நடப்பதாக சொல்லப்படுகிறது. அதனால் அதர்வா கதாநாயகனாக நடிப்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை என்று தெரிகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்