பொன்னியின் செல்வன் படப்பிடிப்பில் செல்ஃபி எடுத்த ஐஸ்வர்யா ராய் !

புதன், 27 ஜனவரி 2021 (19:27 IST)
பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கிவரும் ’பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக நிறுத்தப்பட்டது.

இந்த நிலையில் அடுத்தகட்ட படப்பிடிப்பு சென்னை, ஐதராபாத் மற்றும் இலங்கை ஆகிய இடங்களில் நடத்த மணிரத்னம் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியானது.

ஆனால் இப்படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகளின் கால்ஷீட் பிரச்சனை இருப்பதாகக் கூறப்பட்ட நிலையில் தற்போது மணிரத்னத்தின் கனவுப் படமான பொன்னியின் செல்வன் பட ஷூட்டிங் மீண்டும்  பிரமாண்டமானமுறையில் தொடங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ரசிகர்களின் எதிர்பார்புக்குப் பஞ்சமில்லாத வகையில் மணிரத்னம் இப்படத்தின் அனைத்துனை நடிகர்கள் நடிகைகளின் திறமையை வெளிக்கொணர்வார் என்பதில் ஐயமில்லை.

எனினும் இன்னும் சில மாதங்களில் இப்படத்தின் படபிடிப்பு முடிவடையும் என தெரிகிறது.
இந்நிலையில் பொன்னியின் செல்வன் படப்பிடிப்பின்போது, முன்னாள் உலகப் அழகிப் பட்டம்பெற்றவரும் பாலிவுட் உலகின் முன்னணி நடிகையுமான ஐஸ்வர்யா ராய் செல்ஃபி எடுத்துக்கொண்டபுகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதுகுறித்து இப்படத்தின் மேக் அப் ஸ்டைலிஸ்ட் பதிவிட்டுள்ளதாவது :

பொன்னியின் செல்வன் மாரம்பரிய தோற்றத்திற்காக நான் ஐஸ்வர்யாவுடன் பணியாற்றிவருகிறேன். பொன்னியின் செல்வன் படத்தில் பணியாற்றுவது உற்சாகமாகவுள்ளது..படக்குழுவிற்கு வாழ்த்துகள் எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் பொன்னியின் செல்வன் படத்திற்கு 5 பிரமாண்டமான செட்கள் போட்டு 30 நாட்கள் வரை அதில் ஷூட்டிங் நடத்தை மணிரத்னம் திட்டமிட்டுள்ளார் எனவும், இந்த அரங்குகளில் ஜெயம்ரவியின் நடிக்கும் காட்சிகள் உருவாகிவருவதாகவும், சரியானவகையில் படப்பிடிப்புநடந்தால் 70% படப்பிடிப்புகள் முடிவடைய வாய்ப்புண்டு என  தகவல் வெளியாகிறது.

 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by FLORIAN HUREL (@florianhurel)

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்