மீண்டும் நடிக்க வந்த ரிச்சா பலோட் - நாயகியாகதான் நடிப்பேன் என்று அடம்பிடிக்க மாட்டாரம்

ஞாயிறு, 28 ஜூன் 2015 (16:00 IST)
ஷாஜகான் படத்தில் அறிமுகமான ரிச்சா பலோட், நாயகியாக நடித்துக் கொண்டிருக்கும்போதே உனக்கும் எனக்கும் படத்தில் நாயகியின் தோழியாக சின்ன வேடத்தில் நடித்தார்.


 


அதன் பிறகு அவரைப் பற்றி தகவல் இல்லை. திருமணம் செய்து கொண்டு செட்டிலானதாக கூறப்பட்டது.
 
இந்நிலையில் சத்யபிரபாஸ் இயக்கிய யாகாவாராயினும் நாகாக்க படத்தில் மீண்டும் நடித்துள்ளார். இதுபற்றி கூறிய ரிச்சா பலோட், திருமணத்துக்கு முன்பு எப்படியிருந்தேனோ, அதேபோல்தான் இப்போதும் இருக்கிறேன்.
 
எனக்கு திருமணமானதை நான் சொல்லியிருக்காவிடில் யாருக்கும் தெரியாது. இப்போதும் நான் நாயகியாக நடிக்கலாம். ஆனால், நாயகியாகதான் நடிப்பேன் என்று அடம்பிடிக்க மாட்டேன் என கூறியுள்ளார்.
 
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என்று எந்த மொழியில் வாய்ப்பு வந்தாலும் நடிக்க ரிச்சா தயாராக இருக்கிறார். அவரது கணவர் நடிப்பதற்கு முழு சுதந்திரம் அளித்திருப்பதாகவும் அவர் கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்