காரிலேயே உடைகளை மாற்றிக் கொள்வேன்… சினிமாவில் கடந்துவந்த பாதை குறித்து ரகுல் ப்ரீத் சிங்!

திங்கள், 23 ஜனவரி 2023 (14:52 IST)
பாலிவுட் மற்றும் தென்னிந்திய மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ரகுல் ப்ரீத் சிங்.

2009 ஆம் ஆண்டு கன்னட சினிமா மூலமாக அறிமுகமானவர் ரகுல் ப்ரித் சிங். நீண்ட போராட்டத்துக்குப் பின்னர் இப்போது தமிழ், தெலுங்கு  சினிமாவின் முன்னணி நடிகையாக இருப்பவர் ரகுல் ப்ரீத் சிங்.

தமிழில் வெளிவந்த தீரன் அதிகாரம் ஒன்று படத்தின் வெற்றி மட்டும் தான் இவருக்கு கைகொடுத்தது. அதையடுத்து வெளிவந்த தேவ், என்.ஜி.கே  என தொடர் தோல்வி அடைந்ததால். கோலிவுட் பக்கம் தலைகாட்டாமல் டோலிவுட்டிற்கு பறந்துவிட்டார். இப்போது சிவகார்த்திகேயனின் அயலான் மற்றும் இந்தியன் 2 படங்கள் மட்டுமே கைவசம் உள்ளது.

இந்நிலையில் சினிமாவில் எந்த பின்னணியும் இல்லாமல் வந்து முன்னணி நடிகையாக உயர்ந்துள்ளது குறித்து பேசிய அவர் “எனக்கு எந்த பின்னணியும் இல்லை. பல அலுவலகங்களுக்கு நடிகை தேர்வுகளுக்கு செல்வேன். அப்போது காரிலேயே உடைகளை மாற்றிக் கொள்வேன்” எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்