ஜேம்ஸ் பாண்ட் பட நடிகை போல கண்களாலேயே மிரட்டும் ரகுல் ப்ரீத் சிங்- ரீசண்ட் புகைப்படங்கள்!

வியாழன், 23 பிப்ரவரி 2023 (16:04 IST)
2009 ஆம் ஆண்டு கன்னட சினிமா மூலமாக அறிமுகமானவர் ரகுல் ப்ரித் சிங். நீண்ட போராட்டத்துக்குப் பின்னர் இப்போது தமிழ், தெலுங்கு  சினிமாவின் முன்னணி நடிகையாக இருப்பவர் ரகுல் ப்ரீத் சிங். தமிழில் வெளிவந்த தீரன் அதிகாரம் ஒன்று படத்தின் வெற்றி மட்டும் தான் இவருக்கு கைகொடுத்தது. அதையடுத்து வெளிவந்த தேவ், என்.ஜி.கே  என தொடர் தோல்வி அடைந்ததால். கோலிவுட் பக்கம் தலைகாட்டாமல் டோலிவுட்டிற்கு பறந்துவிட்டார். இப்போது சிவகார்த்திகேயனின் அயலான் மற்றும் இந்தியன் 2 படங்கள் மட்டுமே கைவசம் உள்ளன. இப்போது பாலிவுட்டில் அதிக கவனம் செலுத்தி வரும் ரகுல் விரைவில் திருமணம் செய்ய உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சமூகவலைதளங்களில் ஆக்டிவ்வாக இருந்து அடிக்கடி தன்னுடைய கிளாம ரான புகைப்படங்களை பகிர்ந்து வரும் ரகுல், இப்போது பச்சை நிற உடையில் வித்தியாசமான போஸ் கொடுத்து வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.

 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Rakul singh (@rakulpreet)

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்