ஆதிக் ரவிச்சந்திரன் மேல எனக்கு இருக்கும் வருத்தம் இதுதான்… நடிகை காயத்ரி கருத்து!

ஞாயிறு, 5 மார்ச் 2023 (14:57 IST)
திரிஷா இல்லனா நயன்தாரா என்ற அடல்ட் காமெடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார் ஆதிக் ரவிச்சந்திரன். முதல் படத்திலேயே இளைஞர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்த அவர் அடுத்து சிம்புவை வைத்து அன்பானவன் அசராதவன் அடங்காதவன் என்ற படத்தை இயக்கி தோல்வியை தழுவினார். அதன் பின்னர் அவர் சில ஆண்டுகளுக்கு முன்னர் ‘பஹிரா’ படத்தை இயக்கி முடித்தார். பிரபுதேவா ஹீரோவாக நடித்துள்ள இப்படத்தின் டீசர் வெளியாகி பலத்த சர்ச்சைகளை உருவாக்கியது. இந்த படத்தை பரதன் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வந்தது. இதையடுத்து இந்த படம் மார்ச் 3 ஆம் தேதி ரிலீஸாகி கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது.

இந்நிலையில் இந்த படத்தில் பிரபுதேவாவோடு இணைந்து நடித்துள்ள காயத்ரி “90ஸ் கிட்ஸ்களுக்கு மிகப் பிடித்த நடிகர் பிரபுதேவா. அவருடன் நடித்தது எனது கனவு நிறைவேறிய தருணம். அவரிடம் நான் உங்கள் பாடல்கள் எல்லாம் எனக்கு பிடிக்கும் என்று சொன்னபோது கூட அவர் பெரிதாக அலட்டிக்கொள்ளாமல் சிரித்தார். எனக்கு இந்த படத்தின் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் மேல் ஒரு வருத்தம் உண்டு. என்னை பிரபுதேவாவுடன் நடனம் ஆட  வாய்ப்பை அவர் அமைத்துத் தரவில்லை என்பதுதான் அது” எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்