நடிகை தீபிகா படுகோனுக்கு கொரொனா தொற்று உறுதி

செவ்வாய், 4 மே 2021 (23:59 IST)
பிரபல நடிகை தீபிகா படுகோனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா இரண்டாம் கட்ட அலை உலகம் முழுவதும் பரவி வருகிறது. இதில் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் மக்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்பும் அதிகரித்துவருகிறது.

எனவே, சாதாரண மக்கள் மமுதல் அரசியல்வாதிகள், விளையாட்டு வீரர்கள் மற்றும் சினிமா நட்சத்திரங்கள் என பலரும் பாதிக்கப்படுவருகின்றனர்.

இந்நிலையில், ஓம் சாந்தி ஓம், சென்னை எக்ஸ்பிரஸ்,  போன்ற படங்களில் நடித்துள்ள இந்தி சினிமாவின் முன்னணி நடிகையும் நடிகர் ரன்வீர் சிங்கின் மனைவியுமான தீபிகா படுகோனின் அப்பாவுக்கு கொரொனா தொற்று உறுதியாகி சிகிச்சை பெற்றுவரும் நிலையில், இன்று நடிகை தீபிகா படுகோனுக்கு கொரொனா தொற்று உறுதியாகியுள்ளது.

மேலும்,ஏற்கனவே இவரது தாய் உஜ்ஜால, இளைய சகோதரி அனிஷா ஆகியோருக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்