படுக்கைக்கு வந்தால் 50 ஆயிரம்: நடிகர் மீது பகீர் புகார் கூறிய நடிகை

புதன், 27 மார்ச் 2019 (09:45 IST)
தெலுங்கு சினிமாவை சேர்ந்த கேரக்டர் ஆர்டிஸ்ட் கராத்தே கல்யாணி சினிமாவில் தனக்கு நேர்ந்த பாலியல் தொல்லைகள் குறித்து பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

 
 
தெலுங்கு சினிமாவை சேர்ந்த கேரக்டர் ஆர்டிஸ்ட் கராத்தே கல்யாணி தமிழில் சத்ரபதி படத்தில் நடித்துள்ளார். அதுபோக தெலுங்கில் சில படங்களில் நடித்துள்ளார். பல சீரியல்களிலும் நடித்து வருகிறார். இவர் கராத்தேவில் பிளாக் பெல்ட் வாங்கியிருக்கிறார். 
 
இந்நிலையில் சினிமாவில் படுக்கைக்கு அழைக்கும் குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு, தொடக்கத்தில் நானும் வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கப்பட்டேன். நடிக்க ஒப்பந்தம் செய்வதோடு அதையும் சேர்த்து தான் பேசுகிறார்கள்.  இதற்கு சம்மதித்தால் ரூ 50 ஆயிரம் தருவதாக பிரபல நடிகர் என்னிடம் கூறினார். அதற்கு மறுப்பு தெரிவித்துவிட்டேன் என கூறினார். ஆனால் அந்த நடிகர் யார் என்பது குறித்து கல்யாணி கூறவில்லை.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்