நாம் கேட்டது அவர்களுக்கே ஆச்சரியம். ஏனென்றால், அப்படி எந்த சம்பவமும் படப்பிடிப்பில் நடைபெறவில்லை. எல்லாம் சுமூகமாகப் போய்கொண்டிருக்கிறது. டப்பிங் முடிந்துவிட்டது. இனி நான்குநாள் படப்பிடிப்பு மட்டுமே பாக்கி, அதுவும் முடிந்தால் பின்னணி இசை சேர்ப்புதான் என்று நேர்மறை தகவல்களாக கூறினார்கள். அப்படியானால் சண்டை?