சிஏஏ விவகாரத்தில் நடிகர் விஜய் அடிப்படை அறிவு இல்லாமல் பேசுகிறார்-அர்ஜூன் சம்பத்

Sinoj

செவ்வாய், 12 மார்ச் 2024 (21:21 IST)
சிஏஏ விவகாரத்தில்  நடிகர் விஜய்  அடிப்படை அறிவு இல்லாமல் பேசுகிறார் என்று வேலூரில்  இந்து   மக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன் சம்பத் தெரிவித்துள்ளார்.

இதற்கு காங்கிரஸ், திமுக, தமிழக வெற்றிக் கழகம், புரட்சி பாரதம், விசிக உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

இந்த நிலையில் தமிழக வெற்றிக்கழகம் தலைவரும் நடிகருமான விஜய், நேற்று ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார்.

அதில், சமூக நல்லிணக்கத்துடன் நாட்டு மக்கள் அனைவரும் வாழும் சூழலில், பிளவுவாத அரசியலை முன்னிறுத்திச் செயல்படுத்தும்  இந்திய குடியுரிமை திருத்தச் சட்டம் 2019 ( CAA) போன்ற எந்தச் சட்டமும் ஏற்கத்தக்கது அல்ல. தமிழ்நாட்டில் இச்சட்டத்தை நடைமுறைப்படுத்த மாட்டோம் என்று ஆட்சியாளர்கள் உறுதியளிக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், சிஏஏ விவகாரத்தில்  நடிகர் விஜய்  அடிப்படை அறிவு இல்லாமல் பேசுகிறார் என்று வேலூரில்  இந்து   மக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன் சம்பத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது:

சிஏஏ விவவகாரத்தில் நடிகர் விஜய் அடிப்படை அறிவு இல்லாமல் பேசுகிறார். அவரை கிறிஸ்தவ அமைப்புகள் பின்னிருந்து இயக்குகிறது. மதமாற்றம் செய்யவே அவர் அரசியல் கட்சி தொடங்கியுள்ளார் என்று தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்